Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
vetriyai ....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.3 1st April 2016 Issue: 15


வெற்றியை நிர்ணயிக்க முனைப்புடன் செயல் படுவீர்!

குட்டையைக் குழப்பிவிட்டு தாங்களும் குழம்பி போயிருக்கும் அரசியல் கட்சிகளிடம் ஸெளராஷ்ட்ர சமூகம் மாட்டிக்கொள்ளும் விபரீதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் சமூகப் பத்திரிகைகள் இருக்கிறது. சரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும். இந்த சிறைக்குள் உங்கள் ராஜ்ஜியமா? இல்லை ராஜ்ஜியத்திற்குள் இந்த சிறையா என்று. அது போலதான் இன்றைய நம் சமூகத்தின் நிலை. இன்றைய அரசியல் கட்சிகளிடம் நம் சமூகமா? இல்லை சமூகத்திற்குள் அரசியல் கட்சிகளா? என்ற அவலத்தை உருவாக்கி நமக்குள் வேற்றுமையை வளர்த்துவிட்டு தங்கள் கட்சிகளுக்காக ஆதாயம் பார்ப்பார்கள். இதுதான் உண்மையாக நடக்கப் போகிறது. 

ஒரு வேளை ஒரே தொகுதியில் அனைத்துக் கட்சியினரும் வேட்பாளரை நியமித்து விட்டால் தகுதி வாய்ந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அந்த தகுதி வாய்ந்த வேட்பாளர் யார் என்பதை பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள ஆளுங்கட்சி வேட்பாளராகத்தான் இருக்க முடியும். நம் சமூகத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டுப்; போராடுபவர்கள் அனைவருமே மதுரையை மட்டுமே குறிவைத்து அதிலும் தெற்குத் தொகுதியில் மட்டுமே கேட்டுப் போராடுகிறார்கள். இது ஒரு விபரீதமான முடிவாகும். நம் சமூக மக்கள் அதிகம் வாழுகின்ற பிற தொகுதிகளிலும் நம்முடைய தேவையை சுட்டிக்காட்ட வேண்டும். அங்கும் நம்மால் வெற்றிப்பெற செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனது ஏனோ? 

ஊர்சபைகளோ மத்ய சபையோ ஒரு தொகுதியில் ஒரு கட்சி வேட்பாளருக்கும் மற்றொரு தொகுதியில் மற்றொரு கட்சி வேட்பாளருக்கும் வேலை செய்வார்களா? அது சாத்தியமா என்று தெரியவில்லை. நமது கோரிக்கையை ஏற்று ஏதாவது ஒரு கட்சியினர் இரண்டு மூன்று ஊர்களில் நம் சமூக வேட்பாளரை அறிவித்து விட்டால் நம்முடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனையில் தெளிவுப்படுத்திக் கொண்டால்தான் வரப்போகும் பிரச்னைகளை எளிதில் நம்மால் முடிவெடித்து கையாள முடியும். 

அரசியல் கட்சிகளிடம் இன்னும் கூட்டணி பற்றிய குழப்பங்கள் முடிவுக்கு வரவில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். நாம் நம்மை முதலில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். வேட்பாளர் பட்டியல் அனைத்துக் கட்சிகளும் வெளியிடும் முன்னர் நமது வாக்கு ஸெளராஷ்ட்ரர்களுக்கு மட்டுமே என்ற ரீதியிலும் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்கு நம்முடைய வாக்காக இருக்க வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்படுவோம்!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =